ஒரு மாதத்திற்கு முன்னர் சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

252 0

பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவதி அரேபியா சென்ற பெண் ஒருவர் ஒருமாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கெகிராவை கிதுல்ஹிடியாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்தார்.

மாடி வீடொன்றில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்னர் வீழ்ந்த குறித்த பணிப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a comment