பழைய தகறாறு காரணமாக நபரொருவர் மீது அசீட் வீசிய அண்ணன், தம்பி

244 0

இரு சகோதரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அசீட் வீச்சினால் காயமடைந்த ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் லுணுவில – துலாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த சகோதரர்கள் அசிட் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பழைய தகறாறு ஒன்றே இதற்குக் காரணம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment