தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக GMOA எச்சரிக்கை

10675 0

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக வேலைநேர கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்குள் சம்பளத்துக்கு ஒப்பாக வழங்கப்படவில்லை எனின் தொடர் பணிநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் தொடர்புடைய வேலைநேர கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என GMOA வின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அதிகாரிகளிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களில் குறித்த நாவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லை எனின் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் மக்களுக்கு ஏற்பாடு அசௌகரியங்களுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment