மீண்டும் பரவிப் பாஞ்சானில் ஒருபகுதி காணி விடுவிப்பு

434 0

11-1கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் ஒரு பகுதி இன்று விக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுமக்களின் காணியில் சுமார் மூன்றரை ஏக்கர் அளவிலான காணியை இன்று   கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம்   கையளித்துள்ளனர் விடுவிக்கப்பட்ட  காணிகளின்  உரிமம்  மற்றும்  எல்லை  நிர்ணயங்கள் என்பன ஆராயப்பட்டு வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பரவிபாஞ்சான் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த வாரம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, கடந்த 17ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் அனைத்துக்  காணிகளை மீளப் பெற்றுக்கொள்தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

எனினும் இன்று சுமார் மூன்றரை ஏக்கர் அளவிலான காணியே  விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.