இந்தியாவில் கடந்த வருடம் 34 ஆயிரம் பாலியல் துஸ்பிரயோகங்கள்

392 0

thusoirayokam-300x167இந்தியாவில் கடந்த ஆண்டு மாத்திரம் 34 ஆயிரத்து 651 பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இவ்வாறு துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 98 பேர், முன்னறிந்தவர்களாலேயே இன்னலுக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்றவியல் பதிவுகள் சபையின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் 6 முதல் 60 வயதுகளை உடையவர்களாக இருக்கின்றன.

குறிப்பாக டெல்லி மற்றும் மத்தியபிரதேஸ் ஆகிய பகுதிகளில் அதிக அளவான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டும் இந்தியாவில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.