யாழில் வழக்கு நடைபெறும் போதே பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக பிக்குவின் உடல்

231 0

யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்படுகின்றது.பலத்த இராணுவ பாதுகாப்புடன் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு முற்றவெளி நோக்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகின்றது.யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment