பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

3789 0

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

துகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை வில்லிவாக்கம்-பட்டாபிராம் ரெயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து, திருவள்ளூருக்கு காலை 9.45, 11.30 மற்றும் மதியம் 12.10, 1.20 மணிக்கும், திருத்தணிக்கு காலை 10, 11.45 மணிக்கும், ஆவடிக்கு காலை 10.05, 10.15, 10.45 மற்றும் மதியம் 12.35 மணிக்கும், கடம்பத்தூருக்கு காலை 10.30 மற்றும் மதியம் 12 மணிக்கும், அரக்கோணத்திற்கு காலை 11.05 மற்றும் மதியம் 12.50 மணிக்கும், பட்டாபிராமுக்கு காலை 11.15 மற்றும் மதியம் 12.20, 1 மணிக்கும் புறப்பட இருந்த மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து, திருவள்ளூருக்கு காலை 9.50 மற்றும் மதியம் 1.05 மணிக்கும், பட்டாபிராமுக்கு காலை 10.05 மணிக்கும், ஆவடிக்கு காலை 11.10 மணிக்கும், திருத்தணிக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட இருந்த மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு, திருவள்ளூரில் இருந்து காலை 10.05, 10.50, 11.25 மற்றும் மதியம் 12 மணிக்கும், பட்டாபிராமில் இருந்து காலை 10.30, 11.25 மற்றும் மதியம் 12.50, 1.40 மணிக்கும், ஆவடியில் இருந்து காலை 11.05 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 10.50 மற்றும் மதியம் 12 மணிக்கும், புறப்பட இருந்த மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரிக்கு, சென்னை கடற்கரை மார்க்கமாக, திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து காலை 11.05 மணிக்கும், ஆவடியில் இருந்து மதியம் 12.10 மணிக்கும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து காலை 11.20 மணிக்கும் புறப்பட இருந்த மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-ராயபுரம் ரெயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரிக்கு, சென்னை கடற்கரை மார்க்கமாக, கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் நோக்கி திருப்பி விடப்படும். வேளச்சேரிக்கு சென்னை கடற்கரை மார்க்கமாக, திருவள்ளூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையில் இருந்து, திருத்தணிக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து 12.15 மணிக்கு புறப்படும்.

* சென்னை கடற்கரையில் இருந்து, அரக்கோணத்திற்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து 12.15 மணிக்கு புறப்படும்.

* சென்னை கடற்கரையில் இருந்து, சூலூர்பேட்டைக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து 12.15 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment