அல்லைப்பிட்டி வீடு ஒன்றில் நடந்த பயங்கரம்

292 0

அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதி­காலை புகுந்த கொள்­ளை­யர்­கள் தனித்­தி­ருந்­த­வரைக் கட்­டி­வைத்­து­விட்டு 20 பவுண் நகை மற்­றும் 2 லட்­சம் ரூபா காசு என்­ப­வற்றை கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். இது தொடர்­பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது:

யாழ்ப்­பா­ணம் அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள குறித்த வீட்­டில் மனைவி மற்­றும் பிள்­ளை­கள் உற­வி­னர் வீட்டுக்குச் சென்ற சம­யம் கண­வர் மட்­டும் தனி­யாக வீட்­டில் இருந்­துள்­ளார். அதி­காலை சுமார் ஒரு மணி­ய­ள­வில் ஆறு­பேர் கொண்ட குழு­வி­னர் குறித்த வீட்டுக்குள் நுழைந்­துள்­ள­னர்.

இதன் பின்­னர் அவர்­கள் வீட்­டில் இருந்­த­வ­ரைக் கட்டி வைத்­து­விட்டு 20 பவுண் நகை மற்­றும் 2 லட்­சம் ரூபா ஆகி­ய­வற்­றைக் கொள்­ளை­யிட்­டுச் சென்றனர். இதன் பின்பு குடும்­பத் தலை­வர் அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­யுள்­ளார்.

ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணைகளை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Leave a comment