விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

1553 0

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் கல்கிசை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களான பெண்கள் 29, 30 மற்றும் 48 வயதானவர்கள் எனவும் பாதுக்கை, பேருவளை மற்றும் நாரம்வல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment