வவுனதீவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கைக்குண்டுகள்

217 0

வவுனதீவு – பாவக்குடிச்சேனை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் 18 கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. 

இவற்றில் எஸ்.எப்.ஜி 87 வர்க்க கைக்குண்டுகள் 13ம், என்.ஆர்.423 வர்க்க கைக்குண்டுகள் இரண்டும், டீ 82 ரக கைக் குண்டு ஒன்றும், கே.400 ரக கைக்குண்டு ஒன்றும் உள்ளன.

அத்துடன், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட பெயர் தெரியாத கைக்குண்டு ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment