சட்டவிரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது.!

229 0

லிந்துலை – மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருதொகை மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட தலவாக்கலை விஷேட அதிரடிப்படையினர், இதன்போது ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபரை லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment