தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தீன் கட்டுப்பாடு- மத்திய சுற்றாடல் அதிகாரசபை

249 0

உள்ளுராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனை தொடர்பில் எழுத்து மூலமாக அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரப் பணிகளின் போது பொலித்தீன் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்குமாறு சுற்றாடல் மத்திய அதிகார சபையிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(15) தெரிவித்திருந்தார். இதற்கமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment