மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

302 0

நாட்டின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­துடன் மக்­களின் வாழ்க்­கைச்­செ­லவை குறைப்­ப­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கம்­பஹா நகரில் அமைக்­கப்­பட்ட பஸ் நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

நாட்டில் இன்று பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது வாழ்க்­கைச்­செ­லவு அதி­க­ரிப்­பாகும். வாழ்க்­கைச்­செ­லவு விரைவில் அதி­க­ரிப்­ப­தற்கு நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள கால­நிலை மாற்­றமும் ஒரு கார­ண­மாகும். தேவை­யான காலத்­துக்கு மழை கிடைக்­கப்­பெ­றா­த­மை­யினால் சிலர் தங்­களின் பயிர்­செய்­கை­களை கைவிட்­டுச்­சென்­ற­துடன் பயிர் செய்­கையின் காலமும் மாற்­றப்­பட்­டது. கால ஓட்­டத்­துக்­கேற்ப பயிர்ச்­செய்­கைகள் முறை­யாக இடம்­பெ­றா­ததால் பல பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன.

அத்­துடன் கடந்த இரண்­டு­ வ­ரு­டங்­க­ளாக இந்த பிரச்­சி­னைக்கு இலங்கை முகம்­கொ­டுத்து வரு­கின்­றது. இந்த நிலை நீண்­ட­கா­லத்­துக்கு நாட்­டை பாதிக்­குமா? இல்­லையா? என்று தற்­போதே எதிர்வு கூற­மு­டி­யாது. அதனால் அர­சாங்கம் இதற்கு தீர்­வாக எதிர்­வரும் தமிழ் சிங்­கள புத்­தாண்டு காலம்­வ­ரைக்கும் பல அத்­தி­யா­வ­சிய பொருட்­களை நிவா­ரண விலைக்கு பெற்­றுக்­கொ­டுக்க தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் அரிசி, தேங்காய், மற்றும் மரக்­க­றி­களின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­பது பாரிய பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.

அர­சாங்கம் என்­ற­வ­கையில் இதற்கு தீர்வை தேட­வேண்டும். நவம்பர், டிசம்பர் ஆகும்­போது நெல் பயிர்ச்­செய்கை மேற்­கொள்­ளப்­படும் பிர­தே­சங்­க­ளுக்கு மழை கிடைத்து. அரிசி பிரச்­சி­னைக்கு தீர்வு காணலாம் என நாங்கள் நினைத்தோம். என்­றாலும் அது இடம்­பெ­ற­வில்லை. அதனால் நாங்கள் எதிர்­பார்த்த விளைச்சல் கிடைக்­க­வில்லை. அத­னாலேயே அரிசி விலை அதி­க­ரித்­தது.

இந்­நி­லை­யிலே நானும் ஜனா­தி­ப­தியும் வாழ்­வா­தார செலவை கட்­டுப்­ப­டுத்தும் குழுவை சந்­தித்து இது­தொ­டர்­பாக கலந்­து­ரை­யா­டினோம். அதன் பிர­காரம் அரச பிரி­வி­ன­ருடன் தனியார் துறை­யி­ன­ரையும் இணைத்­துக்­கொண்டு நாடு­பூ­ரா­கவும் அத்­தி­யா­வ­சிய பொருட்­களை நிவா­ரண விலையில் விநி­யோ­கிக்க தீர்­மா­னித்தோம். இதில் அரிசி, பருப்பு,கிழங்கு, சீனி, வெங்­காயம், டின் மீன் உட்­பட பல பொருட்கள் அடங்­கு­கின்­றன.

தமிழ் சிங்­கள புத்­தாண்டு காலம் வரைக்கும் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். புத்­தாண்டு கால­மா­கும்­போது கால­நிலை சீராகும் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். அந்த காலம்­வ­ரைக்கும் மக்கள் பட்­டி­ணியில் இருப்­ப­தற்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுப்­ப­தற்கும் நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

அத்­துடன் அத்­தி­யா­வ­சிய பொருட்கள் ஊடாக முறை­யற்ற லாபத்தை பெற்­றுக்­கொள்ள அர­சாங்­கத்­துக்கு எந்த தேவையும் இல்லை. சர்­வ­தே­சத்தில் விலை குறை­யும்­போது நாட்டில் விலை குறைப்­ப­தற்கும் சர்­வ­தே­சத்தில் விலை அதி­க­ரிக்­கும்­போது அதற்கு நிக­ராக நாட்டில் விலை அதி­க­ரிப்­ப­தற்கும் நாங்கள் தயார். அதே­போன்று மக்­க­ளுக்கு நிவா­ரணம் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் எமது அர­சாங்கம் தயா­ரா­கவே இருக்­கின்­றது. அதன் பிர­காரம் நாட்டின் வாழ்க்­கைச்­செ­லவை கட்டுப்படுத்த பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் மக்களுக்கு நிவாரண பொதியொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே அடுத்தவருடம் ஆரம்பம் முதல் நாங்கள் தயாரித்துள்ள நிவாரணப்பொதிகளை நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Leave a comment