கூட்டு எதிர்க்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

214 0

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அநுர குருப்பு மற்றும் முன்னாள் உப தலைவர் எல். டி விஜேவர்தன ஆகியோர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த இருவரும் இதுவரை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். இதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களான தெஹியோவிட்ட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தோமஸ் சமிந்த மற்றும் தெரணியகல ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்றுச் சபையின் செயலாளர் ஏ.வீ. பியரத்ன ஆகியோர் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

Leave a comment