முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்றவருக்கு அபராதம்

225 0
முல்லைத்தீவு நகரின் ஊடாக சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற ட்ரக்டர் சாரதி ஒருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, அனுமதிப் பத்திரம் இன்றி மண் ஏற்றிச் சென்றமைக்காக 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் 28ம் திகதி இடம்பெறவுள்ளன.

Leave a comment