மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

209 0

பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்களில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 09.00 மணியளவில் அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் பூண்டுலோயா – தொரண சந்தியில் வைத்து, மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உரியிரிழந்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Leave a comment