மக்கள் வங்கியின் பகல் கொள்ளை எம்மீது இல்லை, நாம் சுத்தம் – அமைச்சர் எஸ்.பீ.

282 0

மத்திய வங்கியின் பகல் கொள்ளை யாருடைய தலையில் விழுந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளதாகவும், தமக்கு தூய்மையான ஒரு தலைவரும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டமும் இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரல பிரதேச சபைக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் குழுவுக்கு வாய்ப்பு இல்லையெனவும், அவரது ஆதரவாளர்கள் தற்பொழுது அவரை விட்டும் வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment