கட்டுப்பாட்டு விலையை மீறி தேங்காய் விற்பனை செய்தால் வழக்கு

18177 0

தேங்காயின் கட்டுப்பாட்டு விலையான 75 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகள் சுற்றிவளைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இவ்வாறு, மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 110 ரூபாவிற்கு தேங்காய் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு பதில் நீதவான் இல்லியாஸ் முபாரீஸினால் ரூபா 1,500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a comment