மரை இறைச்சி 150 கிலோவுடன் ஒருவர் கைது!

296 0

நுவரெலியா பொரலந்த பகுதியில் மரை இறைச்சி 150 கிலோவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா இன்று (11) உத்தரவிட்டார். 

நுவரெலியா பொரலந்த – பீட்ரூ பகுதியைச் சேர்ந்த சுப்பையா கணேஷ் (46) என்பவருக்கே அபராதம் விதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மரை இறைச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 150 கிலோகிராம் மரை இறைச்சியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a comment