இன்று நண்பகலுக்குள் சேவைக்கு வாருங்கள் !- சிவப்பு அறிவித்தல்

314 0

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து சம்பந்தப்பட்ட சகல ஊழியர்களும் சேவையிலிருந்து நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 2600 ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment