ஊழல் மோசடிகள் தொடர்பில் பேச அரசுக்கு உரிமையில்லை-மக்கள் விடுதலை முன்னணி

263 0

தேசிய அரசாங்கத்திற்கு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுவதற்கோ கடந்த ஆட்சியில் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கோ உரிமையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த மோசடியிலும் ஈடுப்படாமல் இருந்தாலும் அவர்கள் ஊழல் மோசடியில் இருந்து விடுப்பட்டவர்களாக முடியாது. அரசாங்கம் ஊழல் செய்தவர்களையும் ஊழல் மிக்க அரசாங்கம் ஒன்றையும் பாதுகாக்க முயற்சிக்குமானால், அதன் பொறுப்பை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் அனைவரும் ஏற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

Leave a comment