தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பிரதிநிதிகள் விசேட கலந்துரையாடல்

4220 74

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

இக்கலந்துரையாடலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிரந்தரப் பிரதிநிதிகளும் பொதுச் செயலாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை / கல்கிசை நகர சபை மற்றும் பொரலஸ்கமுவ, மஹரகம ஊராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை ஐ.தே.க. இன்று (8) செலுத்தியுள்ளது.

இதேபோல், களுத்துறை மாவட்டத்துக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று செலுத்தியுள்ளது.

Leave a comment