பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு

247 0

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹமட் ஹஷ்மத் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்றது.

குறித்த சந்திப்பில் இருநாட்டு நீண்டகால இராஜதந்திர தொடர்புகள், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை தொடர்ந்தும் பேணுவது தொடர்பிலும் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment