முன்னாள் போராளி ஒருவர் மரணம்!

1711 0

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோட்டப் பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளி ஒருவர் டெங்கினால் நேற்று(6) உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாமடு- சேனைப்பிலவைச் சேர்ந்த பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 வயதுடைய இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்பவரே உயிரிழந்தவராவார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இவர் முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று(6) திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment