கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

220 0

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளுகந்தேவ பிரதேசத்திலிருந்து கஜமுத்துக்களுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வலான குற்ற ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமையவே நேற்று (5) மாலை 3.30 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 3 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கல்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32,35 மற்றும் 42 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(6) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment