இலங்கை வீரர்களுக்கு இந்தியா செல்ல அனுமதி

240 0

இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அழைக்கப்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேருக்கும் இந்திய செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அவர்கள் 09 பேருக்கும் மீண்டும் இந்தியா செல்வதற்கான அனுமதியை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக வழங்கியுள்ளார்.

இன்று அதிகாலையில் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர்.

விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இன்று காலை இந்தியாவுக்கு செல்ல முற்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் அந்த வீரர்கள் இன்று இரவு இந்திய செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment