மக்கள் சக்தி அளப்பெரியது!

381 0

சூரிய சந்­திர இயக்­கம் இருக்­கும்­ வரை இந்த நாட்­டில் ஒரு கொத்து அரிசி 25 சதங்­க­ளுக்கு மேல் விற்­கப்­ப­ட­மாட்­டாது. மேற்­கண்­ட­வாறு இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த பின்­ன­ரான தேசிய அர­சின் முத­லா­வது தலைமை அமைச்­ச­ரான டி.எஸ்.சேன­நா­ய­க்கவின் மறைவை அடுத்து தலைமை அமைச்­சர் பொறுப்பை ஏற்ற அவ­ரது மக­னான டட்லி சேன­நா­யக்க நாட்டு மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தார்.

சுதந்­திர இலங்­கை­யின் பொது மக்­க­ளும் அந்த வாக்­கு­றுதி குறித்து திருப்­தி­ய­டைந்­தி­ருந்­த­னர். டட்லி சேன­நா­ய­க்க­வின் தலை­மை­யி­லான அந்த அர­சில் நிதி அமைச்­ச­ரா­கப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, அரிசி விலையை கொத்து 25 சத­மாக வழங்­கு­வ­தன் மூலம் நாங்­கள் நாட்­டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு முட்­டுக் கட்­டை­போட்டு வரு­கி­றோம் எனத் தெரி­வித்­தார், அந்த ஆண்­டில்­தான் (1950ஆம் ஆண்­டில்) இலங்கை உலக வங்­கி­யில் அங்­கத்­து­வத்­தைப் பெற்­றி­ருந்­தது.

இலங்கை அரசு நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கும் நிவா­ரண உத­வி­கள் மற்­றும் கட­னு­த­வி­களை இத்­து­டன் நிறுத்­திக் கொள்ள வேண்­டு­மென உலக வங்கி இலங்கை அரசை வலி­யு­றுத்­தி­யது. புதிய அர­சுக்கு நாட்டு மக்­கள் அதி­கா­ரத்தை வழங்­கி­யி­ருந்­த­போ­தி­லும், நாட்டு மக்­க­ளது அத்­தி­யா­வ­சிய பாவ­னைப் பொரு­ளுக்­கான விலை­கள் ஆகா­யத்­தைத் தொடு­ம­ள­வுக்கு உயர்­வ­டைந்­தி­ருந்­தன.

பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான இல­வச உணவு விநி­யோ­கம் இத­னால் தடைப்­பட்­டது. அரச ஊழி­யர்­க­ளது சம்­பள உயர்­வு­கள் பிற்­போ­டப் பட்­டன. இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, பயங்­க­ர­மான விளை­வாக அமைந்­தது 1950ஆம் ஆண்­டுக்­கான வர­வு­ செ­ல­வுத்­திட்­டத்­தின் மூலம் ஒரு­கொத்து அரி­சி­யின் விலை 70 சத­மாக அதி­க­ரிக்க வைக்­கப்­பட்­ட­மை­யா­கும்.

உண்­மை­யில் தமது அறி­வு­றுத்­தல், முறைப்­படி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா என்­பது குறித்­துத் தெரிந்­து­கொள்ள உலக வங்­கி­யின் கண்­கா­ணிப்­பா­ளர் சேர் சிட்ணி கேஸ் தலை­மை­யி­லான குழு இலங்­கைக்கு வந்­தி­ருந்­தது.

அந்த வேளை­யில் நாட­ளு­மன்­றில் எதிர்க்­கட்­சி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி உட்­பட இட­து­சா­ரித் தரப்­பு­கள் மீது நாட்­டின் தொழி­லா­ளர் வர்க்­கத்­தி­னர் பெரும் மதிப்­ப­ளித்து வந்­த­னர். நாட்­டின் முத­லா­ளித்­து­வத் தரப்­பி­ன­ரது சுரண்­டல்­க­ளி­லி ­ருந்த தொழி­லா­ளர் வர்க்­கத்­தைக் காப்­பாற்­றும் இரட்­ச­கர்­க­ளாக தொழி­லாளர் வர்க்­கத்­த­வர்­க­ளால் கரு­தப்­பட்ட இட­து­சா­ரி­கள் நிலமை குறித்து தொழி­லாளர் வர்க்­கத்­த­வர்­களை எச்­ச­ரித்­த­தோடு, அர­சுக்கு எதி­ராக அவர்­க­ளைக் கிளர்ந்­தெழ வைக்­கும் முயற்­சி­க­ளி­லும் வெற்றி கண்­ட­னர்.

தொழி­லாளர் வர்க்­கத்­த­வர்­களை ஒன்­றி­ணைப்­ப­தில் வெற்­றி­கண்ட இட­து­சாரி அர­சி­யல் தரப்­பி­னர்­கள்

இவ்­வி­தம் தொழி­லாள வர்க்­கத்­தி­னரை அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்­தெழ வைப்­பித்­த­வர்­க­ளில் சம­ச­மா­ஜக்­கட்­சி­யின் தலை­வர் என்.எம்.பெரேரா, கம்­யூ­னிஸ்ட் கட்­சித்­த­லை­வர் பீற்­றர் சென­மான் மற்­றும் புரட்­சி­கர சம­ச­மா­ஜக் கட்­சித்­த­லை­வர் பீற்­றர் சென­மான் மற்­றும் புரட்­சி­கர சம­ச­ம­ாஜக் கட்­சித் த­லை­வர் பீற்­றர் கென­மான் ஆகி­யோர் முக்­கி­ய­மா­ன­ வர்­கள். நாட்­டின் பல்­வேறு அரச துறை­க­ளில் பணி­யாற்­றிய தொழி­லாள வர்க்­கத்­தி­ன­ரது தொழிற்­சங்­கங்­கள் இது விட­யத்­தில் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கிச் செயற்­பட்­டன.

முத­லில் அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­பில் ஆரம்­பித்து பின்­னர் பணிப்­பு­றக்­க­ணிப்பு, ஆர்ப்­பாட்ட எதிர்ப்பு ஊர்­வ­லங்­கள், மற்­றும் முழு அடைப்­புப் போராட்­டம் என்ற அள­வுக்கு உச்­சம் பெற்­றன.

இட­து­சா­ரிக்­கட்­சி­கள் தொழி­லா­ள­வர்க்­கத்­தி­ன­ரைத் தூண்டி நிலை­கு­லைய குழப்­பு­வ­தற்கு முன்­னர் எப்­ப­டி­யா­வது வரவு செல­வுத்­திட்­டத்தை நிறை­வேற்­றி ­யாக வேண்­டு­மென்ற முனைப்­பில் ஐ.தே. கட்சி அரசு செயற்­பட்­டது 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி நாட­ளு­மன்­றத்­தில் தனது வரவு செல­வுத்­திட்­டத்தை விவா­திக்க ஒழுங்­கு­கள் மேற்­கொண்­டார் நிதி­ய­மைச்­சர் ஜே.ஆர். ஆனால் இட­து­சா­ரித் தலை­வர்­கள் நாட­ளு­மன்­றக் கட்­ட­டத்­துக்கு முன்­பாக கோல்­பேஸ் திட­லில் தமது ஆத­ர­வா­ளர்­களை ஒன்­று­தி­ரட்டி அர­சுக்கு எதி­ரா­கப் பெரும் ஆர்ப்­பாட்­டெ­மான்­றினை ஏற்­பாடு செய்­த­னர்.

ஜ.தே.கட்சி நாட­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரது விடு­க­ளில் முன்­னால் பொது­மக்­கள் ஒன்­று­கூடி அவர்­களை விடு­க­ளுக்­குள் முடங்­க­ வைத்­த­னர். உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் பல அர­சின் வரவு செல­வுத் திட்­டத் துக்கு எதி­ராக முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு இட­து­சா­ரி­கள் அழைப்பு விடுத்­த­போ­தி ­லும், அரசு அத­னைப் பொருட்­ப­டுத்­தாது குறித்த தினத்­துக்கு ஒரு­வா­ரம் முன்­ன­தாக தனது வரவு செல­வுத்­திட்­டத்தை நாட­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றிக் கொண்­டது.

மக்­கள் சக்­தியை  வெளிப்­ப­டுத்­திய  எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள்

அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்­தெழ வைக்­கப்­பட்ட நாட்டு மக்­கள் தம்­மி­டையே ஒன்­றி­ணைந்து பல்­வேறு வகை­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­த­னர். அரச பணி­யா­ளர்­கள் தமது கட­மை­க­ளுக்­குச் செல்­லாது புறக்­க­ணித்­த­னர். நக­ரங்­கள், கிரா­மங்­கள் தோறும் சகல இடங்­க­ளி­லும் கறுப்­புக்­கொ­டி­கள் பறக்­க­வி­டப்­பட்­டன. சந்­தி­கள் தோறும் மரங்­க­ளின் கிளை­கள் வெட்­டிப் போடப்­பட்­டுப் போக்­கு­வ­ரத்­துக்­கள் தடை­செய்­யப்­பட்­டன. நெடுஞ்­சா­லை­க­ளில் படுத்­து­றங்­கித் தமது அர­சுக்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னெ­டுத்த பொது­மக்­க­ளுக்கு பாதை­யில் அடுப்பு மூட்டி ரொட்டி தயா­ரித்­துக் கொடுப்­ப­தில் பெண்­க­ளும் இணைந்து போராட்­டத்­தைத் தீவி­ரப்­படுத்­தி­னர்.

நாடாளு­மன்­றக் கட்ட­டத்­திலோ அல்­லது வேறு அரச கட்­ட­டங்­க­ளிலோ அமைச்­ச­ர­வைக் கூட்­டத்தை நடத்த இய­லாத நிலை­யால், கொழும்­புத் துறை­ மு­கத்தில் நங்­கூ­ரம் இடப்­பட்டு நிறுப்­ப­டுத் தப்­பட்­டி­ருந்த கப்­ப­லொன்­றில் அமைச்­சர்­கள் கூடி அமைச்­ச­ர­வைக் கூட்­டத்தை நடத்த வேண்­டிய அள­வுக்கு பொது மக்­க­ளது எதிர்ப்­புத் தீவி­ரம் அடைந்­தி­ருந்­தது.

நாட்டு மக்­க­ளது எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள் நாளுக்கு நாள் தீவி­ரம் அடைந்­த­மை­யால், கடை­சி­யில் எது­வுமே செய்ய இய­லாத நிலை­யில் ஊர­டங்­குச் சட்­டம் பிறப்­பித்து இரா­ணு­வத்­தைப் பயன்­ப­டுத்தி மக்­கள் போராட்­டத்தை அடக்க அரசு தீர்­மா­ னித்­தது. ஊர­டங்­குச் சட்­டத்­தின் கீழ் குழப்­பம் விளை­வித்­தோ­ருக்கு எதி­ராக பொலி­ஸார் மேற்­கொண்ட துப்­பாக்­கிச் சூட்­டில் கொழும்பு மாவட்­டத்­தின் சில பகு­தி­க­ளில் தொழி­லா­ளர்­கள் சிலர் உயி­ரி­ழக்க நேர்ந்­தது.

அர­சின் அடக்­கு­மு­றைக்கு எதி­ராக மக்­கள் சக்­தி­யின் பலத்தை நிரூ­பிக்க இட­து­சா­ரித் தலை­வர்­கள் ஏற்­பாடு செய்த எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளால் நெடுஞ்­சா­லைப் பாலங்­கள், புகை­யி­ர­தப் பாதை­கள் என்­ப­வற்­றுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட சேதங்­க­ளைப் புன­ர­மைக்க பெரும் செல­வும், நீண்ட கால­தா­ம­த­மும் ஏற்­பட்­டன.

நாட்டு மக்­க­ளது எதிர்ப்­புக்­கா­ர­ண­மாக வெறுப்­புற்ற தலைமை அமைச்­சர் டட்லி சேன­நா­யக்க, தமது உடல் நிலை திருப்­தி­க­ர­மாக இல்­லை­யெ­னக் கார­ணம் காட்­டித் தமது பத­வி­யின்­றும் தாமாக வில­கிக் கொண்­டார் இத­னால் சேர்.ஜோன் கொத்­த­லா­வல தலைமை அமைச்­சர் பொறுப்பை எற்­க­வேண்டி நேரிட்­டது. தாம் தலைமை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­ற­தும் சேர்.ஜோன் கொத்­த­லா­வல, அத்­தனை பிரச்­சி­னை­க­ளுக்­கும் கார­ண­மான நிதி அமைச்­சர் ஜே.ஆரது அந்த வரவு செல­வுத்­திட்­டத்தை கைவி­டு­கி­றேன் என்று அறி­வித்­தார்.

நாட்டு மக்­களை அமை­திப்­ப­டுத்த சேர்.ஜோன் கையாண்ட  நட­வ­டிக்­கை­கள்

நாட்டு மக்­களை அமை­திப்­ப­டுத்­தும் நோக்­கில் குறித்த வரவு செல­வுத்­திட்­டத்­தைக் கைவி­டு­வ­தாக அறி­வித்த சேர்.ஜோன், அடுத்த நிதி அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ஜே.ஆரை விலக்கி அவரை விவ­சாய அமைச்­ச­ராக நிய­மித்­தார். அத்­தோடு நின்று விடாது கொத்து 70 சத­மாக நிர்­ண­யிக்­கப்­பட்ட அரி­சி­யின் விலையை 55 சத­மா­கக் குறைப்­ப­தாக அறி­வித்­தார்.

ஆனா­லும் தமது அத்­த­கைய செயற்­பா­டு­க­ளால் அர­சின் இருப்பை சேர்.ஜோனால் தக்க வைத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. ஐ.தே.கட்சி நாளுக்கு நாள் பொது மக்­கள் மத்­தி­யில் மதிப்­பி­ழக்க ஆரம்­பித்­தது. எந்­த­வொரு பல­ம்மிக்க அர­சை­ யும்,நாட்டு மக்­கள் விரும்­பி­னால் அதி­கா­ரம் இழக்­க­வைக்க இய­லு­மென்­ப­தற்கு இலங்கை அர­சி­ய­லின் இந்த வர­லாற்று நிகழ்­வு­கள் உதா­ர­ண­மாக அமை­கின்­றன. அத­னை­ய­டுத்து இடம்­பெற்­ற­ பொ­துத் தேர்­த­லில் ஐ.தே.கட்சி படு­தோல்­வி­ய­டைந்­த­தும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­ய­தும் இலங்கை அர­சி­ய­லின் வர­லாற்று நிகழ்­வு­களே.

ஒரு­போ­தும் தோற்­க­டிக்­கப்­பட முடி­யா­த­வ­ரா­கப் பேசப்­பட்ட முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பதவி இழக்க நேர்ந்­த­தும் நாட்டு மக்­க­ளது அதி­ருப்­தியை அவர் எதிர்­கொள்ள நேர்ந்­த­மை­யி­னா­லேயே ஆகும்.

 

Leave a comment