நிலவும் மழையுடனான காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நாளை காலை 9.30 மணிவரை அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மழையுடனான காலநிலை தொடரும்பட்சத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

