​முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கள்ளநோட்டுக்களை கொடுத்து வர்த்தகர்களை ஏமாற்றிய நபர்கள்

286 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் இனம்தெரியாத நபர்கள்  கள்ளநோட்டுக்களை கொடுத்து பொருட்களை வாங்கி வர்த்தகர்களை ஏமாற்றிவிட்டு  தப்பிச்சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை என வர்த்தகர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் இன்றைய தினம் இனம்தெரியாத நபர்கள் ஒரே இலக்கமுடைய ()ஆயிரம் ரூபா தாள்களை கொடுத்து  வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சுமார் 6 0 0 0 ரூபா பணம் 6 வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கி மீதிப்பணத்தினையும் பெற்றுச்சென்றுள்ளனர் வர்த்தகர் ஒருவர் இந்த பணத்தை கள்ள நோட்டு என கண்டறிந்ததை தொடர்ந்து இவ்வாறு 6 பேரிடம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தொலைபேசி இலக்கத்தையும் வழங்கி மக்களுக்கு பிரச்சனை எனில் உடனடியாக வருவோம் என தெரிவித்த பொலிசார் இவ்வாறு நடந்து கொள்வது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்ப்படுத்துகிறது என தெரிவித்தார்.   

Leave a comment