எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் – பசில்

464 0
எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெஹிவலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதய அரசாங்கத்தினர் வீதிகளை புனரமைக்காது அபிவிருத்தி நடைப்பெறுவதாக கூறுகின்றனர்.
மத்திய வங்கியிலும் முறி விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன.
தேர்தல் பிற்போடப்பட்டுக் கொண்டே செல்கின்றது.
அத்தியசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு நிலையில், எவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் தேர்தலை எதிர்க்கொண்டு, மகிந்த அணி வெல்வது உறுதி எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment