போலி நாணயத்தளுடன் இருவர் கைது!

274 0

திரு­கோ­ண­மலை இறக்­கக்­கண்டிப் பகு­தி­யில் ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­க­ளு­டன் இரண்டு பேரை கைது செய்­துள்­ள­தாகத் திரு­கோ­ண­மலைப் பிராந்­தியப் போதைப்­பொ­ருள் தடுப்புப் பிரி­வின் பொறுப்­ப­தி­காரி எஸ். ஐ.ஜனு­ஷன் தெரி­வித்­தார்.

நிலா­வெளிக் கடற்­ப­டை­யி­னர் வழங்­கிய இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து இறக்­கக்­கண்­டி­யில் சந்­தேக நபரைச் சோத­னை­யிட்ட போது ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­க­வும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­கள் இறக்­கக்­கண்டி வாழை­யூற்றுப் பகு­தி­யைச் ­சேர்ந்த எம்.பீ.றிஷாத் (வயது–-29) மற்­றும் ஏ.எச்.றிஸ்­வான் (வயது-–29) என­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­கள் இரண்டு பேரை­யும் குச்­ச­வெளிப் பொலிஸ் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ள­தாக ஜனுஷன் தெரிவித்தார்.

Leave a comment