திருகோணமலை இறக்கக்கண்டிப் பகுதியில் ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகத் திருகோணமலைப் பிராந்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். ஐ.ஜனுஷன் தெரிவித்தார்.
நிலாவெளிக் கடற்படையினர் வழங்கிய இரகசியத் தகவலையடுத்து இறக்கக்கண்டியில் சந்தேக நபரைச் சோதனையிட்ட போது ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இறக்கக்கண்டி வாழையூற்றுப் பகுதியைச் சேர்ந்த எம்.பீ.றிஷாத் (வயது–-29) மற்றும் ஏ.எச்.றிஸ்வான் (வயது-–29) எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக ஜனுஷன் தெரிவித்தார்.