யானைச் சின்னத்தில் போட்டியிட முற்போக்குக் கூட்டணி முடிவு!

270 0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி யானைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து விட்டதாக அந்தக் கூட்டணியின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்தாண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையகம் அறிவித்தது. ஐக்கிய தேசியக்  கட்சி தலைமையிலான கூட்டணியில் களமிறங்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் சின்னம் குறித்துப் பேச்சுகளை நடத்தி வருகின்றது.

எதிர்வரும் 5ஆம் திகதி இறுதி முடிவெடுக்கும் முகமாக கூட்டணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

ஏற்கனவே நுவரெலியா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில்  போட்டியிடக் கூட்டணி முடிவு செய்துள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் எவ்வாறு போட்டியிடுவது  மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவை எடுக்கும் முகமாகவே எதிர்வரும் 5ஆம் திகதி சந்திப்புக்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

Leave a comment