ஐ.நா. செயற்­குழு இலங்கை வரு­கி­றது!

280 0

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல்  தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின்  மூவர் கொண்ட உறுப்­பி­னர்கள் டிசம்பர் மாதம்  4 ஆம் திகதி முதல்   15 ஆம் திக­தி­வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். 

நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்­பிடும் நோக்­கி­லேயே இந்த செயற்­கு­ழுவின் விஜயம்  அமை­ய­வுள்­ளது.

ஜோஸ் அன்­டோ­னியோ  லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட்  ஆகிய  மூவரே  இலங்­கைக்கு விஜயம்  செய்­ய­வுள்­ளனர்.    ஐக­கிய நாடு­களின் இந்த  விசேட நிபு­ணர்கள்   பொலிஸ் நிலை­யங்கள் சிறைச்­சா­லைகள்   புனர்­வாழ்வு  நிலை­யங்கள்  உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து நிலை­மை­களை பார்­வை­யி­ட­வுள்­ளனர்.

மேல் மாகாண வட மத்­திய மாகாணம் வடக்கு கிழக்கு  தெற்கு மற்றும்   மத்­திய மாகா­ணங்­க­ளுக்கும்   ஐக்­கிய நாடு­களின் விசேட செய­லணி  விஜயம் செய்து நிலை­மை­களை பார்­வை­யி­ட­வுள்­ளது. அரச அதி­கா­ரிகள் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரையும்  சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளனர்.

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல்  தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின்  இலங்கை விஜயம் குறித்த  மதிப்­பீட்டு அறிக்­கை­யா­னது ஐக்­கிய நாடுகளின்  மனித உரிமை பேரவையின் 39 ஆவது   கூட்டத்  தொடரில்   சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Leave a comment