சைபர் தாக்குதல் தொடர்பாக விசாரணை!

326 0

cyberattack_1805164bசிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்ற வாரம் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது.

குறித்த இணையத்தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதிலுள்ள தகவல்களை பிழையாக மாற்றிய சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் சிறீலங்கா அதிபரின் அவசர பிரச்சாரப் பிரிவின் அதிகாரியின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

தற்பொழுது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறீலங்கா கணினி அவசர ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்பு பிரதான பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.