சனில் நெத்திகுமார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் நிராகரிப்பு

230 0

பிணை முறி விநியோக விவகாரத்தில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் தம்மை கைது செய்ய வேண்டாம் என்று கோரி, சனில் நெத்திகுமார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மனு இன்று 3 நீதியரசர்களைக் கொண்ட குழுவின் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.

பிணை முறி மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்த அனீகா விஜேசூரிய மற்றும் அவரது சகோதரர் விஜித் விஜயசூரிய ஆகியோரை அச்சுறுத்தியதாக, சனில் நெத்திகுமார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் தம்மை கைது செய்ய வேண்டாம் என்று தெரிவித்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் இதனை பரிசீலனை செய்த நீதியரசர்கள் குழு, மனுவை நிராகரித்துள்ளனர்.

Leave a comment