கிழக்கு மாகாண ஆளுநர் – பிரித்தானிய பிரதி உயிரிஸ்தானிகர் சந்திப்பு

250 0

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் பிரித்தானிய பிரதி உயரிஸ்தானிகர் டொம் பேன் (TOM BURN) இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களும் இன நல்லிணக்கம், அபிவிருத்தி, அரசியல் பற்றி ஆளுநரிடம் வினவியதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகளவில் வாக்குகள் கிடைக்கப்பெற்றது. அந்த வாக்குகள் தொடர்ந்தும் இருக்கின்றதா? எனவும் பிரித்தானிய பிரதி உயரிஸ்தானிகர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளனர். சுற்றுலாத்துறை, கல்வித்துறை போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி அடையச்செய்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

Leave a comment