உள்ளுராட்சி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

243 0

சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் 12.00 மணிவரை வழங்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 93 ஆவணங்களுக்கான வேட்பமனு கோரும் பணிகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.

Leave a comment