கோப்பாயில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலையா?

243 0

யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக, அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இராணுவத்தினர் மற்றும் அப் பகுதி மக்களுக்கு இடையிலேயே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகிலுள்ள பகுதியில் மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயாராகிக் கொண்டிருந்த வேளை, அங்கு இராணுவத்தினர் வந்தமையே குழப்பநிலைக்குக் காரணம் என, மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, யுத்த வாகனங்களும் அப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  குறித்த பகுதியில் இராணுவ முகாம் இருப்பதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அதுபோன்ற குழப்பநிலை எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment