தமிழீழ உடை, கொடிகளுடன் கொழும்பில் பேரணி !

306 0

தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பிவித்துரு ஹெல உறுமய, பேரணியையும் ஆரம்பித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவே தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்ட உடைகளுடன் கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

பேரணிக்கு முன்னர், ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதன் பின்னர் புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கெதிராக வாக்களிக்கும்படி எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர். இதனையடுத்து உந்துருளிப் பேரணி புறக்கோட்டையிலிருந்து ஆரம்பமாகியது.

Leave a comment