விரைவாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம்

3093 0
இந்த முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக விரைவாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம் இன்று முழுவதும் இடம்பெறுகிறது.
ஆட்பதிவு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 8.30 தொடக்கம் 4.30 வரையில் பத்தரமுல்லை – சுஹூருபாயவில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்த விசேட வேலைத்திட்டம் இடம்பெறுகிறது.
இன்றைய ஒருநாள் சேவையில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள் வருகை தருவது அத்தியாவசியம் இல்லை.
பெற்றோர் அல்லது உறவினர்கள் உறுதிப்படுத்தக்கூடியவர்கள் கிராம சேவகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை கொண்டுவருது கண்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment