விபத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

287 0

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று மஹியங்கனை 17ம் கட்டை வியானா நீரோடையில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இவ் விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெமுனுபுர ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்த இரட்டைச் இளைஞர்களில் ஒருவருடைய சடலமே இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களின் 17 வயதுடைய இரட்டைப் பிள்ளைகள் அந்தக் காரில் பயணம் செய்துள்ளனர்.

அவர்களில் தாய் மற்றும் தந்தையின் சடலங்கள் நேற்றைய தினம் காரினுள் இருந்ததுடன், மற்றொரு இளைஞர் நேற்று காப்பாற்றப்பட்டிருந்தார்.உயிரிழந்தவர்கள் கண்டி திகன அமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமாலி சகுந்தலா 41 மற்றும் சமிந்த ஹேமாரத்ன 43 வயதுடைய கணவன் மனைவி ஆகும்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, சோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment