தேர்தலை விரைவாக நடாத்த கோரும் பிரேரணை பாராளுமன்றத்துக்கு

301 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடாத்த கோரும் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக்கொள்வது தொடர்பில் கட்சி தலைவர்களுக்கிடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அவ்வாறான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவளிப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் இணக்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேர்தலை விரைவாக நடாத்த மேற்கொள்ளவேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக அறிவிக்குமாறு இந்திய விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment