ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் யாழ் மாநகரசபைக்குப் புதிய கட்டடம்

277 0

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1000 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் நகர அபிவிருத்திச் சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜீ.கே.குணதிலக தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர்;, யாழ் மாநகரசபைக்கான தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக நீண்ட காலமாக பல்வேறு தரப்புகளாலும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அது கைகூடியிருக்கவில்லை. தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அடுத்த ஆண்டுத் திட்டத்தில் யாழ் மாநகரசபைக்கான தலைமைச் செயலகத்தை அமைத்துக் கொடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வந்துள்ளது. அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் தலைமைச் செயலகக் கட்டடப் பணிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment