உங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது!

517 0

முஸ்லிம் மதத் தலை­வர்கள் தங்­க­ளது இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் பௌத்தமதத் தலை­வர்­க­ளா­கிய எங்­களால் சிங்­கள இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போய்­விடும். நீங்கள் நிறுத்­தினால் நாங்­களும் நிறுத்­துவோம்.இன்றேல் நிலை­மைகள் மோச­ம­டை­வதை  தவிர்க்க முடி­யாது  என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

கிந்­தோட்­டையில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து பிர­தே­சத்தில் சுமுக நிலையைத் தோற்­று­விக்கும் பொருட்டு அர­சியல், மத மற்றும் சிவில் சமூக தலை­வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று முன்­தினம் பிற்­பகல் காலி மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், கிந்­தோட்டை வன்­மு­றை­களைப் பொறுத்­த­வரை சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட வதந்­தி­களே கார­ண­மாகும். இன்று கத்­தி­க­ளையும் வாள்­க­ளையும் விட நாம் கைகளில் வைத்­தி­ருக்கும் கைய­டக்கத் தொலை­பே­சி­கள்தான் பெரும் ஆயு­தங்­க­ளாக மாறி­யுள்­ளன.

இந்த சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக பரப்­பப்­பட்ட வதந்­தி­களும் தவ­றான தக­வல்­க­ளுமே அளுத்­க­ம­விலும் ஒரு கல­வரம் வெடிக்கக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. அதுவே இன்று கிந்­தோட்­டை­யிலும் நடந்­துள்­ளது.

கிந்­தோட்டை சம்­ப­வத்தைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­கள மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த நாம் தயார். ஆனால் அதற்கு முன்­பாக முஸ்லிம் மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். அந்தக் கட­மையை முஸ்லிம் மதத் தலை­வர்கள் செய்ய வேண்டும்.

கிந்­தோட்­டையில் வன்­மு­றைகள் இடம்­பெற்ற அன்­றி­ரவே வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இப் பகு­திக்குள் பிர­வே­சித்­த­மையை நாம் கண்­டிக்­கிறோம். இந்த முஸ்லிம் அமைச்­சர்கள் கிந்­தோட்­டைக்குள் வந்­ததால் சிங்­கள மக்கள் அச்­ச­ம­டைந்­தனர். வெ ளி மாவட்­டத்தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் எவரும் காலி மாவட்­டத்­துக்குள் வர வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. அதனை இங்­குள்ள மக்கள் பிர­தி­நி­திகள் பார்த்துக் கொள்ளக் கூடாது.

அதே­போன்று இச் சம்­ப­வங்­களின் பின்னர் கைது செய்­யப்­பட்ட அனை­வரும் விடு­விக்­கப்­பட வேண்டும். ஊர­டங்குச் சட்­டத்தை தொடர்ந்து நீடிப்­பதை நாம் விரும்­ப­வில்லை. அவ்­வாறு நீடிப்­பது இங்­குள்ள மக்­களை தொடர்ந்தும் பதற்ற நிலையில் வைத்­தி­ருக்­கவே வழி­வ­குக்கும். எனவே ஊர­டங்குச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதை நாம் எதிர்க்­கிறோம் என்றும் ஞான­சார தேரர் இக் கூட்­டத்தில் மேலும் குறிப்­பிட்டார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றை­களைத் தொடர்ந்து மறுநாள் சனிக்­கி­ழமை பிற்­பகல் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்தார். சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட சிங்­கள மக்­களின் வீடு­க­ளுக்குச் சென்று நிலை­மை­களை அவ­தா­னித்த அவர் பௌத்த விகா­ரையில் இடம்­பெற்ற கூட்­டத்­திலும் கலந்து கொண்டார்.

ஞான­சார தேரரின் வரு­கையைத் தொடர்ந்து சனிக்­கி­ழமை பிற்­பகல் பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் மத்­தியில் அச்ச சூழ்நிலையொன்று தோற்றம் பெற்றது. எனினும் பொலிசார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment