காலி கிந்­தொட்ட பிர­தே­ச இனக்­க­ல­வரம் தொடர்பில் எமக்கு தொடர்பில்லை! – ஞான­சார தேரர்

826 0

காலி கிந்­தொட்ட பிர­தே­சத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற இனக்­க­ல­வரம் தொடர்பில் பொது­பலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேர­ரினால் அறிக்­கைகள் எதுவும் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் அவரின் பெயரில் அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் த­ளங்­க­ளூ­டாக அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்தி ஊடக பிர­சா­ரங்கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் பொது பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

சம்­பவம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து இக் கல­வ­ரத்தில் சொத்­துக்­களை இழந்­த­வர்­க­ளுக்கும் விஷே­ட­மாக காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கும் உரிய நஷ்­ட­ஈட்­டினை ப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தோடு சமூ­கத்தில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்த அனை­வரும் உடன்­பட வேண்டும் என சம்­பவ இடத்­துக்கு விஜயம் செய்த ஞான­சார தேரர் குறிப்­பிட்­டுள்ளார்.

நேற்­றைய தினம் கல­வரம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த இடத்­துக்கு பொலிஸார் சென்­றி­ருந்த போதிலும் அர­சியல் தலை­யீ­டுகள் கார­ண­மாக அதனை முறை­யாக கட்­டுப்­ப­டுத்த பொலி­ஸா­ரினால் முடி­யாது போன­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. மேலும் இப்­பி­ர­தே­சத்தில் உள்ள முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டாக நாம் இதனைக் கரு­து­கின்றோம்.

கின்­தொட்ட பிர­தே­சத்தில் ஏற்­பட்ட வாகன விபத்தில் சிங்­கள இனத்­த­வ­ருக்கும் முஸ்லிம் இனத்­த­வ­ருக்கும் இடம்­பெற்ற பிரச்­சி­னையே இவ்­வாறு இனக்­க­ல­வ­ர­மாக தோற்றம் பெற்­றுள்­ளது இப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்ட விபத்து தொடர்பில் முறை­யான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு நாம் கேட்டுக் கொள்­கின்றோம். நாட்டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இது தொடர்­பான பிரச்­சி­னைகள் ஏற்­படும் பிர­தே­சங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்­தி­யுள்ளோம்.

அண்­மையில் கம்­பொல பிர­தே­சத்தில் இடம் பெற்ற பெர­ஹரா நிகழ்வில் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்­த­வர்கள் முஸ்லிம் பள்­ளி­வா­சலின் அருகில் வைத்து கல் எறிந்து தாக்­குதல் நடத்­தினர். அதன் போதும் இவ்­வா­றா­ன­தொரு இனப்­பி­ரச்­சினை ஏற்­பட்­டது. இச்­சம்­பவம் முஸ்லிம் அரா­ஜக வாதி­களின் உள்­நாட்டில் மட்­டு­மல்­லாது சர்­வ­தேச ரீதி­யிலம் இடம் பெறும் முஸ்லிம் சிங்­கள இனக்­க­ல­வ­ரத்தின் தாக்கம் விரைவில் எமது நாட்­டிலும் அபா­ய­க­ர­மான ஒரு தாக்கத்தை தோற்றுவிக்கும்.

இவ்வாறான ஆபத்தை தடுப்பதற்காகவும் எதிர்வரும் வருடங்களில் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்காகவும் தமிழ், இஸ்லாம் மற்றும் பௌத்த இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

Leave a comment