வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை!

6799 0

புதிய ஜனநாயக மார்க்சிஷ லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ அரசியல் பகுப்பாய்வு விமர்சன நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை(19) பிற்பகல் 3.30 மணியளவில் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சமூக விஞ்ஞானச் செயற்பாட்டாளர் மு. மயூரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பைச் சேர்ந்த தி. அனோஜன் வரவேற்புரையினையும், நூல் ஆய்வுரைகளைப் பசுமைத் திருமலை அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரான தி. கோபகன் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களான க. செந்தூரனும், கி. முரளீதரன் ஆகியோரும், “நீங்களும் எழுதலாம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தனபாலசிங்கம் கருத்துரையையும் ஆற்றவுள்ளனர்.

பதிலுரையை நூலின் ஆசிரியரும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவுடமைப் பாதையில் முழுநேர அரசியல் பணியாற்றி வருகின்றவருமான சி.கா.செந்திவேல் நிகழ்த்தவுள்ளார்.

Leave a comment