சட்டவிரோத வெளிநாட்டு வகை சிகரெட்களை விற்பனை செய்த நபர் கைது!

338 0

அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த நபரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தலவாக்கலை நகரிலுள்ள பலசரக்கு கடையொன்றை  இன்று மதியம் சுற்றிவளைத்து  சோதனையிட்ட போதே 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனுமதிபெற்று விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளுடன் கலந்தே மேற்படி சிகரெட் வகைகளை விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரான கடை உரிமையாளரை பொலிஸ்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்  எதிர்வரும் நாட்களில் வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்தார்.

Leave a comment