உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சி! -காஞ்சன விஜேசேகர

4093 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சியின் பின்னணியில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலர் இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

எல்லைநிர்ணயத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பின்னணியில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மூவர் இருப்பதாகவும், அவர்களுக்கு தெரிந்தேதான் இவையனைந்தும் இடம்பெறுவதாகவும் அவர் இன்று சபையில் தெரிவித்தார்.

அந்த அமைச்சர்களுள் தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, லக்‌ஷ்மன் யாபா அபேகுணவர்தன ஆகியோர் இந்த மனுவின் பின்னணியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த மனுவை தாக்கல் செய்த வாக்காளர்கள் ஆறு பேரின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகவும் காஞ்சன விஜேசேகர கருத்துக்களை வௌியிட்டார்.

Leave a comment