செலான் வங்கி ஊழியரை தாக்கிய இளைஞர் குழு

325 0

a-1வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள செலான் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வங்கியில் வைத்து இளைஞர் குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது வங்கியில் கடுமையிலிருந்து வங்கி வாயிலுக்கு ஊழியர் வருகை தரும் தருணம்பார்த்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர் குழுவொன்று வங்கி ஊழியரை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் கூறினார்கள்.

 மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.