காசநோயை ஒழிப்பது தொடர்பான மாநாடு நாளை

221 0

காசநோயை ஒழிப்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு நாளை இடம்பெறவுள்ளது. 

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களுக்கு இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிவில் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை சார்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a comment